Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் மத்தியில் சூயஸ் திட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன: ஷரவன்குனார் ஜடாவத்

செப்டம்பர் 26, 2019 01:04

கோவை: சூயஸ் திட்டம் குறித்து தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பபடுகின்றன என கோவை மாநகராட்சி ஆணையர் ஷரவன்குனார் ஜடாவத் கூறியுள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

பொதுமக்கள் குடிநீர் இணைப்பு பெறும் நடவடிக்கைகள் கோவை மக்களுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளது. சூயஸ் திட்டத்தை பொறுத்தவரை தண்ணீர் விநியோகம் குழாய் பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே மேற்கொள்ளும். 

கோவை மாநகராட்சியில் ஏற்கனவே இருக்க கூடிய குடிநீர் இணைப்புகள் அப்படியே தொடரும். மாநகராட்சியின் அதிகாரத்திற்குட்பட்டே சூயசின் அனைத்து பணிகளும் தொடரும் எனக்கூறினார்.

தலைப்புச்செய்திகள்